Thursday, May 2, 2013

Recent shares in Facebook


••
வாழ்வின் மிகப் பெரிய போராட்டம் .. 'நீ நீயாகவே இருக்கத் தான்'
என்கிறார் Leo F.Buscaglia.
••
# சரியா சொன்னிங்க பாஸ் !


••
நன்கு பேசத் தெரிந்தவர்கள் பெரும்பாலும் அமைதியாகவே அத்தனை நிமிடங்களையும் கடந்து போய் விடுகிறார்கள் ! 
••

•• பொறாமைகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் பாராட்டுக்கள் ••

பிரபாகரன் சேரவஞ்சி

••
தற்காலிக உணர்ச்சி வேகத்தில் நிரந்தரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள் ! 
••

பிரபாகரன் சேரவஞ்சி 

••
நம்பிய பொய்கள் உண்மை தெரிந்த பின் நெஞ்சைக் கொல்லும் . 
சிரித்த உண்மைகள் என்றென்றும் நெஞ்சிலேயே தங்கிக் கொள்ளும்
••

பிரபாகரன் சேரவஞ்சி

••
கேட்கிற அனைத்தும், ஒரு கருத்து மட்டுமே , உண்மையல்ல. பார்க்கிற அனைத்தும் ஒரு பார்வையே, உண்மையல்ல. அப்போ எதுதான் உண்மை'ன்னு கேக்குறிங்களா? உண்மை பொய் எல்லாமே மாயை தான் போலிருக்கு....எது எப்டின்னு எடை போடாம ஜாலியா வாழுங்க பாஸ்.... எடை போடாம எப்டி ஜாலியா இருக்குறதுன்னு கேக்குரிங்களா .... யோவ்.. போய்யா... :) :)
          ••

 


••
சிலர் வரம் , சிலர் பாடம் . வரமாகும் மனிதர்கள் ஆழ்நெஞ்சிலும் , பாடம் சொல்லும் மனிதர்கள் மூளையிலும் தங்கிக் கொள்கிறார்கள் !
••
பிரபாகரன் சேரவஞ்சி


••
Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.
Isaiah 43:19
••
எல்லா கசப்புணர்வுகளும் மறையும் , வலிகள் எல்லாத்துக்கும் ஒரு வழி பிறக்கும், தெளிவும் பிறக்கும்... பொறுத்திரு... உன்ன சுத்தி இருக்கிற எல்லாத்தையும் அழகா மாத்துவேன் ... புதுப்பிப்பேன்'ங்கறார் கடவுள் ...! 
••
ஏசாயா 43:19

# அப்படியே ஆகட்டும் ! ஆமென் ..



••
whenever life sucks, remember you're going to die someday ! 
••
# தக்காளி அவ்வளோதாண்டா தத்துவம் ! :)



••
"இருக்குமிடத்தில், இந்த நொடியில், இன்புற்றிரு"

-இங்கர்சால் 
••


••
எது வேண்டாமோ அதைத் தேடாமல் இரு.ஏனெனில் எது வேண்டுமோ அது உன்னைத் தேடித் தவித்துக் கொண்டிருக்கிறது !
••
பிரபாகரன் சேரவஞ்சி

••
'மேகம் 
கடகடவென்று சிரித்துவிட்டு 
மழையாக இறங்கியது.
நனைந்து சிலிர்த்த 
பூமி சொன்னது :
பெருமை 
மேலே ஏறுவதில் இல்லை 
கீழே இறங்குவதில் இருக்கிறது ! '
••
கவிக்கோ அப்துல் ரகுமான் 


••
எந்தத் துன்பத்திலும் தோள் கொடுக்கிற அன்பைத் தேடிக்கொள் ! எந்தக் கைகள் உன் கைகளிலிருக்கும் கவலைகளை பிடுங்கி எறிந்துவிட்டு தன்னை இணைத்துக் கொள்ளுமோ அங்கே சென்று சேர்ந்து கொள்.நிம்மதியாய் வாழ் !
••

No comments:

Post a Comment